Published : 04 Sep 2023 11:15 AM
Last Updated : 04 Sep 2023 11:15 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 21 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (திங்கள்கிழமை) ஏற்ற இறக்கமின்றித் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்வடைந்து 65,579 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 19,507 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் ஏற்ற இறக்கம் கண்டது. காலை 10:43 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 21.74 புள்ளிகள் சரிவடைந்து 65,365.42 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14.15 புள்ளிகள் உயர்ந்து 19,449.45 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல்கள், நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளின் லாப பதிவுகளால் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், விப்ரோ, என்டிபிசி, மாருதி சுசூகி, எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன.

ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x