Published : 23 Aug 2023 10:39 AM
Last Updated : 23 Aug 2023 10:39 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (புதன்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்வடைந்து 65,234 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 19,413 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாகவே தொடங்கின. தொடர்ந்து வர்த்தகத்தின் போது சரிவைச் சந்தித்தது. காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 57.88 புள்ளிகள் சரிவடைந்து 65,162.15 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14. புள்ளிகள் சரிந்து 19,381.80 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல்கள் முதலீட்டாளர்களிடம் எச்சரிக்கையை தூண்டியதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றியே இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் உயர்வில் இருந்தன.

ஜியோ ஃபைனான்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மகேந்திரா, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மகேந்திரா பேங்க், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x