Published : 19 Aug 2023 05:38 AM
Last Updated : 19 Aug 2023 05:38 AM

கினாரா கேபிடல் ரூ.1,100 கோடி கடன் வழங்க திட்டம்

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான கினாரா கேபிடல், 2023-24 நிதி ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ.1,100 கோடி கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கினாரா கேபிடல் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திருநாவுக்கரசு கூறுகையில், “2012-ல் தொடங்கப்பட்ட கினாரா கேபிடல் நிறுவனம் இதுவரை 33,000 நிறுவனங்களுக்கு ரூ.1,960 கோடி கடன் வழங்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23 நிதி ஆண்டில் ரூ.656 கோடி கடன் வழங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.1,100 கோடி கடன் வழங்கதிட்டமிட்டுள்ளோம். பெண்தொழில்முனைவோருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x