Published : 26 Dec 2017 01:01 PM
Last Updated : 26 Dec 2017 01:01 PM

மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வு: சென்செக்ஸ் 34,000 புள்ளிகளை கடந்தது

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 34,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில், குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 65 புள்ளிகள் உயர்ந்து 34,000 புள்ளிகளை கடந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 22 புள்ளிகள் அதிகரித்து 10,515 புள்ளிகளாக உயர்ந்தது.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு கண்டதாக பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எனினும் பின்னர் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சற்று சரிவை சந்தித்தது. சந்தை உயர்வு கண்ட நிலையில், லாபத்தை பதிவு செய்ய விரும்பிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததால் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x