Published : 23 Dec 2017 08:25 PM
Last Updated : 23 Dec 2017 08:25 PM
பில்கேட்ஸ் தனக்கு சொன்ன சிறந்த அறிவுரையே, அவரது இடத்தை நிரப்ப வேண்டாம் என்று சொன்னதுதான் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக சத்யா நாதெல்லா அளித்துள்ள பேட்டியொன்றில், "முன்னாள் மைக்ரோசாஃப்ட் தலைவர்கள் ஸ்டீவ் பால்மர் மற்றும் பில்கேட்ஸ் இருவரும், எங்கள் இடத்தை நிரப்ப முயற்சிக்காதே என்றுதான் என்னிடம் கூறினார்கள். மேலும், நான் என் சுய ஆளுமையுடன் இயங்கத் தேவையான நம்பிக்கையையும் எனக்குத் தந்தார்கள். அவர்கள் இருவரும் கட்டமைத்த இந்த நிறுவனத்தை நினைத்து நான் பெருமையடைகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT