Published : 26 Nov 2017 11:25 AM
Last Updated : 26 Nov 2017 11:25 AM

சீன டயர் இறக்குமதி சரிவு

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் பொருள் குவிப்பு தடுப்பு நடைமுறைகள் காரணமாக சீனாவில் இருந்து செய்யப்படும் டயர் இறக்குமதி சரிந்திருக்கிறது என டயர் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் சதிஷ் சர்மா தெரிவித்தார்.

பணமதிப்பு நீக்க காலத்திலே 20 சதவீதம் சரிந்திருக்கிறது. அதன் பிறகான நடவடிக்கைகளால் மேலும் சரிந்திருக்கிறது. தற்போது பாதிக்கும் மேலாக சீன டயர் இயக்குமதி சரிந்துவிட்டது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 1.50 லட்சம் யூனிட் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது 50,000 யூனிட் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் சரியும். சீன டயர்களின் லாப விகிதமும் குறைந்திருப்பதால் டீலர்களும் இறக்குமதி செய்வதை விரும்பவில்லை. நடப்பாண்டில் டயர் துறையின் வளர்ச்சி ஒற்றை இலக்கத்தில் இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும்.

உலகம் ரேடியல் டயர் நோக்கி சென்ற போது இந்தியா அதற்கு தயாராகவில்லை. தற்போது இந்திய நிறுவனங்களும் ரேடியல் டயர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச சந்தைகளில் இறங்கி இருக்கிறோம். மேலும் இந்த துறை மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதியளித்திருப்பதாகவும் சர்மா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x