Published : 10 Nov 2017 10:07 AM
Last Updated : 10 Nov 2017 10:07 AM
இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி இதற்கு முன்பு இருந்ததை விட மிக வேகமாக இருக்கும், ஆனால் முழுமையான திறனை எட்டுவதற்கு இன்னும் சில காலம் ஆகும் என ஹார்வேர்டு பிஸினஸ் ரிவ்யூ பத்திரிகை தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறது. அந்த கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது:
டிஜிட்டலுக்கான தொடக்கத்தை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பணமதிப்பு நீக்கத்துக்கு முன்பாக இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக குறைவாக இருந்தன. ஆனால் அதற்கு பின்னர் பல மடங்குக்கு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர்ந்திருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய காரணங்களால் இந்தியா டிஜிட்டல் சார்ந்த பொருளாதாரமாக வேகமாக மாறி வருகிறது. டிஜிட்டல் சார்ந்த பொருளாதாரமாக உயர பணமதிப்பு நீக்கம் மட்டுமல்லாமல் ஜிஎஸ்டியும் உதவி வருகிறது.
இந்திய பொருளாதாரம் ஏற்ற இறக்கமாகவும், சமமற்றதாகவும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. முழுமையாக டிஜிட்டலுக்கு மாறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும். என ஹார்வேர்ட் பிஸினஸ் ரிவ்யூ கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT