Published : 09 Aug 2023 10:26 AM
Last Updated : 09 Aug 2023 10:26 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 259 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை சற்று சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவடைந்து 65,745 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 19,556 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. பின்னர் சரிவடையத் தொடங்கின. காலை 10:00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 259.45 புள்ளிகள் சரிவடைந்து 65,587.05 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61.35 புள்ளிகள் சரிந்து 19,509.50 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் பாதகமான சூழல், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்த முன்னெச்சரிக்கை போன்ற காரணங்களால் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின். பெரும்பாலான பங்குகள் சரிவுடனேயே காணப்பட்டது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், பாரதி ஏர்டெல், டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, மாருதி சுசூகி, விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இன்ட் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பவர் கிரிடு கார்ப்ரேஷன், இன்போசிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பெயிண்ட்ஸ்,எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x