Published : 04 Aug 2023 07:13 PM
Last Updated : 04 Aug 2023 07:13 PM

சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 480 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்வடைந்து 65,721 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 135 புள்ளிகள் (0.70 சதவீதம்) உயர்ந்து 19,517 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக நேரத்தின்போது நிலையில்லாமல் பயணித்தது. காலை 09:38 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 195.62 புள்ளிகள் உயர்வடைந்து 65,436.30 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 99.20 புள்ளிகள் உயர்ந்து 19,480.85 ஆக இருந்தது.

அழுத்தத்தில் இருந்து மீண்ட உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல், தனியார் வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் வாங்குதல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இறுதி நாளை ஏற்றத்துடன் நிறைவு செய்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், டெக் மகேந்திரா, விப்ரோ, பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், எல் அண்ட் டி, இன்போசிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வடைந்து இருந்தன.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x