Published : 13 Nov 2017 09:48 AM
Last Updated : 13 Nov 2017 09:48 AM
இந்திய முதலீட்டு சந்தையில் பி நோட்டுகள் வழியாக முதலீடு செய்வது கடந்த 8 ஆண்டுகளில் அல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தின் இறுதியின் படி இந்திய முதலீட்டு சந்தையில் பி-நோட்டுகளின் மதிப்பு ரூ.1.23 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி கடுமையான விதிகளை கொண்டு வந்ததால் பி நோட்டுகளின் முதலீடு குறைந்துள்ளது.
பங்குச்சந்தை, கடன் சந்தை, டெரிவேட்டிவ்ஸ் என அனைத்து பிரிவுகளிலும் பி நோட்டுகளின் முதலீடு ரூ.1,22,684 கோடியாக குறைந்திருக்கிறது. இதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பி நோட்டுகளின் முதலீடு ரூ.1,10,355 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் உள்ள பதிவு செய்யப்படாத முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால் அவர்களுக்கு பதிவுசெய்யப்பட்ட அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் பி நோட்டுகளை வழங்குவர்.
செப்டம்பர் மாதத்தில் மொத்த பி நோட்டு முதலீடுகளில் கடன் மற்றும் டெரிவேட்டிவ்ஸ் சந்தை தவிர ஈக்விட்டி சந்தையில் மட்டும் ரூ.91,160 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் மொத்த அந்நிய முதலீடுகளில் பி நோட்டு முதலீடுகளின் பங்கு 4.1 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் தவறான வழியில் பி நோட்டுகளை முதலீடு செய்வது கண்டறியப்பட்டால் 1,000 டாலர் அபராதம் விதிப்பதாக செபி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT