Published : 20 Nov 2017 10:30 AM
Last Updated : 20 Nov 2017 10:30 AM

`ஆர்பிஐயிடம் கூடுதல் டிவிடெண்ட் கேட்கவில்லை’

ஆர்பிஐயிடம் கூடுதல் டிவிடெண்ட் கேட்கவில்லை. உபரியாக இருக்கும் ரூ.13,000 கோடியை மட்டுமே மத்திய அரசு கேட்கிறது என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளார் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்தார். மேலும், கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ஆர்பிஐ ரூ.65,876 கோடி டிவிடெண்ட் வழங்கியது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் ரூ.30,659 கோடி மட்டுமே வழங்கியது. மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் ஆர்பிஐயிடமிருந்து ரூ.58,000 கோடி கிடைக்கும் என மத்திய அரசு கணித்திருக்கிறது. அதனால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தொகையை மட்டுமே கேட்கிறோம் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x