Published : 16 Nov 2017 09:58 AM
Last Updated : 16 Nov 2017 09:58 AM

சாம்சங் `தி ஃப்ரேம்` டிவி அறிமுகம்

சாங்சங் இந்தியா நிறுவனம் தி ஃப்ரேம் என்கிற பெயரில் புதிய அதிநவீன டிவியை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரிவு பொது மேலாளர் ப்யூஷ் குன்னபல்லி கலந்து கொண்டு பேசுகையில், வாடிக்கையாளர்களில் தேவையறிந்து அதி நவீன தொழில்நுட்பங்களில் சாம்சங் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்தர புத்தாக்க முயற்சியாக தி ஃப்ரேம் அறிமுகமாகிறது. தொலைக்காட்சி திரையை பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டி, நமது விருப்பங்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் புகைப்பட சட்டக அனுபவத்தையும் தி ஃபிரேம் டிவி அளிக்கும்.

புகழ்பெற்ற வெஸ்பெகர் நிறுவனத்துடன் இணைந்து இதன் வடிவமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.

இந்திய டிவி சந்தையில் முன்னணி பிராண்டாக சாம்சங் 30 சதவீத சந்தையை வைத்துள்ளது. இதில் 52 அங்குலம் உள்ளிட்ட உயர்ரக மாடல்கள் சந்தை யில் 42 சதவீத சந்தை சாம்சங் வசம் உள்ளது. உயர்ரக பிரிவில் தமிழக அளவில் 54 சதவீத சந்தையுடன் முன்னிலையில் இருக்கிறோம். தற்போது உயர்ரக மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் புத்தாக்க முயற்சியாக சாம்சங் தி ஃப்ரேம் விளக்கும் என்றார்.

இந்த டிவியை சாம்சங் நிறுவனம் சென்னை உற்பத்தி ஆலையில் தயாரிக்கிறது. 55 அங்குல டிவியின் விலை ரூ.2,74,900 ஆகவும், 65 அங்குல டிவியின் விலை ரூ.3,99,900 ஆகவும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x