Published : 26 Jul 2023 07:10 PM
Last Updated : 26 Jul 2023 07:10 PM

சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன.சென்செக்ஸ் 351 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயர்வடைந்து 66,707 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 97 புள்ளிகள் (0.50 சதவீதம்) உயர்ந்து 19,778 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.காலை 10:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 526.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,882.13 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 134.60 புள்ளிகள் உயர்ந்து 19,815.20 ஆக இருந்தது.

வலுவான காலாண்டு அறிக்கையால் எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஐடிசி பங்குகளின் லாபத்தால் உந்தப்பட்ட பங்குச்சந்தைகள் மூன்று நாள் இழப்புக்கு முடிவு கட்டி புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இன்ட்ரா வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 540 புள்ளிகள் வரை உயர்ந்து 66,897 ஆக இருந்தது. நிஃப்டி, 19,825 ஆக உயர்வைச் சந்தித்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 351.49 புள்ளிகள் உயர்வடைந்து 66,707.20 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 97.70 புள்ளிகள் உயர்ந்து 19,778.30 ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட்டி, ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ், ஃபஜாஜ் பின்சர்வ், எம் அண்ட் எம், டெக் மகேந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், மாருதி சுசூகி, பவர்கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x