Published : 20 Nov 2017 10:27 AM
Last Updated : 20 Nov 2017 10:27 AM
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை கடந்த செப்டம்பரில் 84 சதவீதம் உயர்ந்து ரூ.74,090 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பரிவர்த்தனை ரூ.40,130 கோடியாக இருந்தது. அதேபோல பாயின்ட் ஆப் சேல் மெஷின்களின் பயன்பாடும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 20.3 கோடி வர்த்தகம் நடந்தது. தற்போது 37.8 கோடி வர்த்தகம் நடந்திருக்கிறது. வோர்ல்ட்லைன் என்னும் நிறுவனத்தின் அறிக்கை இதனை தெரிவித்திருக்கிறது.
பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு ரொக்கமில்லாத பரிவர்த்தனையை மக்கள் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். முன்பு இருந்த நிலைமைக்கு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும், கார்டு பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது என வோர்ல்ட்லைன் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சி.இ.ஓ. தீபக் சந்த்னானி தெரிவித்தார்.மொத்தம் 85.3 கோடி கார்டுகள் உள்ளன. இதில் 3.33 கோடி கார்டுகள் கிரெடிட் கார்டுகள் ஆகும். மீதம் உள்ளவை டெபிட் கார்டுகள் ஆகும். இதில் ஜன் தன் யோஜனாவுக்கு பிறகு டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கிரெடிட் கார்டுகளின் வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT