Published : 14 Nov 2017 10:06 AM
Last Updated : 14 Nov 2017 10:06 AM
இந்திய வங்கிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் மேற்கொள்ளும் முதலீடுகள் நடப்பாண்டில் 11.7 சதவீதம் அதிகரித்து ரூ.60,000 கோடியாக (910 கோடி டாலர்) இருக்கும் என்று தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான கார்ட்னர் கூறியுள்ளது. கார்ட்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பணமற்ற பொருளாதார நிலையை நோக்கி இந்திய வங்கித் துறை மாற்றமடைந்து வருகிறது. இதனால் மின்னணு பணப் பரிமாற்ற கட்டமைப்புகளை உருவாக்குவதில் பல வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. ``பண மதிப்பு நீக்கத்துக்கு பின்னர் மின்னணு பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டாலும், கடந்த இரண்டு காலாண்டுகளில் மிக மெதுவாகவே முதலீடுகளை வங்கிகள் மேற்கொண்டுள்ளன’’ என்று கார்ட்னர் ஆய்வு நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மவுட்ஸி சா கூறினார். இதில் அதிகபட்ச முதலீடு புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களிலும், மின்னணு பரிமாற்ற தொழில்நுட்பங்களிலும் மேற்கொள்ளப்படும் என்றார்.
பெருவாரியான இந்திய வங்கிகள் தங்கள் முதலீடுகளை தொடர்பு குறைந்த பரிவர்த்தனை (contactless payment) தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய உள்ளன என்றும் கார்ட்னர் கூறியுள்ளது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT