Published : 28 Jun 2023 11:04 AM
Last Updated : 28 Jun 2023 11:04 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (புதன்கிழமை) புதிய உச்சத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 210 புள்ளிகள் உயர்வடைந்து 63,626 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 18,875 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் அதன் புதிய உச்சத்துடன் தொடங்கியது. காலை 10:31 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 266.36 புள்ளிகள் உயர்வடைந்து 63,682.39 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 70.90 புள்ளிகள் உயர்ந்து 18,888.30 ஆக இருந்தது.

அமெரிக்க பங்குச்சந்தைகளின் உயர்வு மற்றும் புதிய வெளிநாட்டு நிதி வரவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை புதிய ஏற்றத்துடன் தொடங்கின. பெரும்பாலான உயர்வில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரைபஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், பவர்கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், என்டிபிசி, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பங்குகள் உயர்வில் இருந்தன.

கோடாக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, டெக் மகேந்திரா, அட்ல்ரா டெக் சிமெண்ட், , ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x