Published : 16 Oct 2017 10:07 AM
Last Updated : 16 Oct 2017 10:07 AM

ஊக்குவிப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கவில்லை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம்

பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலனை ஏதும் செய்யவில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கி இருக் கிறார். வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரி வித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு ஊக்க நடவடிக்கை குறித்து எந்தவிதமான பரிசீலனையும் செய்யவில்லை. ஊக்க நடவடிக்கை என்னும் வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவோம் என்று மட்டுமே கூறினேன். ஆனால் ஊடகங்கள் இந்த வார்த்தையை ஊக்க நடவடிக்கை என்று புரிந்துகொண்டுவிட்டனர். அதனால் இந்த கேள்விக்கு ஊடகங்களே பதில் அளிக்க வேண்டும் என்றார். மேலும் நிதிப்பற்றாக்குறை மூன்று ஆண்டு களுக்கு முன்பு இருந்ததை விட மிகவும் குறைந்திருக்கிறது. மேலும் குறைப்பதற்கான நட வடிக்கையை மத்திய அரசு எடுக்கும்.

மேலும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது, வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகிய இரண்டையும் ரிசர்வ் வங்கி சரியாக கையாளும். இந்த விஷயங்களில் ரிசர்வ் வங்கி நிபுணத்துவம் பெற்றிருக்கிறது. அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பார்கள். என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் என்று கூறினார்.

ஜூன் காலாண்டு வளர்ச்சி விகிதம் குறைந்த நிலையில், ரூ.40,000 கோடிக்கு ஊக்க நடவடிக்கைகளை அரசு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது ஜேட்லி இதனை மறுத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x