Published : 26 Oct 2017 10:25 AM
Last Updated : 26 Oct 2017 10:25 AM

ஸ்டார்ட் அப்களுக்காக ரூ. 320 கோடி நிதியம் தொடக்கம்: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்

மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 10 பொதுத்துறை நிறுவனங்களும் ₹320 கோடி முதலீட்டில் ஒரு நிதியத்தைத் தொடங்கியுள்ளன. ஸ்டார்ட் அப்களுக்கு உதவுவதற்காக இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இந்த நிதியின் மூலம் 36 ஸ்டார்ட் அப்களுடன் கைகோர்த்து திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.320 கோடி முதலீடு மேற்கொள்ளப்படும். மேலும் நிதி தேவைப்பட்டால் இதேபோல நிதி திரட்ட வகை செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இந்த நிதியம் மூலம் புத்தாக்க சிந்தனைகள், புதிய திட்டங்கள், புதிய தொழில்நுட்பங்கள் உருவாக வழி ஏற்படும். இது எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார். இது நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட நிதி அல்ல என்று பிரதான் தெளிவுபடுத்தினார். இது தொழில் ரீதியான முதலீடு. இதில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கு உள்ளது.

15 மாதங்களில் இதுவரை 3 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 15 மாதங்களில் மேலும் 4 கோடி பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.வரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது இறக்குமதிக்கான சுமை குறையும் என்று குறிப்பிட்ட அவர், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி குறைந்தால் அது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x