Published : 30 Dec 2021 04:56 PM
Last Updated : 30 Dec 2021 04:56 PM

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை

கோப்புப் படம்

சென்னை: சென்னையில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சென்னை மற்றும் டெல்டா மாட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையைப் பொறுத்தவரை தாழ்வான பகுதியில் மழை நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

டிசம்பர் மாதத்தில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்குக் கடலோர மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x