புதுச்சேரியில் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதி: மேலும் ஒருவர் உயிரிழப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் கரோனா பாதிப்பிற்கு மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று(டிச. 9) வெளியிட்ட தகவலில்,

"புதுச்சேரி மாநிலத்தில் 2,729 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 21 பேர், காரைக்காலில் 2 பேர், மாஹேவில் 5 பேர் என மொத்தம் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 54 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 187 பேரும் என மொத்தமாக 241 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,877 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக நீடிக்கிறது. புதிதாக 16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 38 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 12 லட்சத்து 90 ஆயிரத்து 861 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in