சென்னையில் ஜூன் 28-ல் ‘அம்மா... உறவல்ல... உணர்வு’ நிகழ்வு

ட்ரை ஆரா வழங்கும் சிறப்பு நிகழ்வு
சென்னையில் ஜூன் 28-ல் ‘அம்மா... உறவல்ல... உணர்வு’ நிகழ்வு
Updated on
1 min read

சென்னை: ட்ரை ஆரா வழங்​கும் ‘அன்​பென்​றாலே அம்மா - அம்​மா... உறவல்​ல... உணர்​வு’ எனும் சிறப்பு நிகழ்வு வரும் ஜூன் 28 ஞாயிற்​றுக்​கிழமை மாலை 4 மணிக்கு சென்னை ஆர்​.ஏ.புரத்​தி​லுள்ள இமேஜ் ஆடிட்​டோரி​யத்​தில் நடை​பெற உள்​ளது.

அண்​மைக்​கால​மாக மேற்​கத்​திய நாடு​களைப் பின்​பற்றி அன்​னையர் தினத்தை நாம் கொண்​டாடி வரு​கிறோம். தாய்​மை​யின் மகத்​து​வத்தை குறிப்​பிட்ட தினத்​தில் கொண்​டாடு​வதைக் காட்​டிலும், தினந்​தினம் மனங்​களில் கொண்​டாடு​வதே நம் மண்​ணின் மரபாகும்.

நிபந்​தனையற்ற அன்​பின் உறை​விட​மாகத் திகழும் தாய் என்ற உன்​னத​மான அந்த உறவை, தாய்​மை​யைப் போற்​றும் பாடல்​கள், நெகிழ்ச்​சி​யான உரை​யாடல்​கள், மகிழ்ச்​சி​யான அனுபவப் பகிர்​வு​கள் என பிரம்​மாண்​ட​மாக கொண்​டாட ட்ரை ஆரா நிறு​வனம் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்​பாடு செய்​துள்​ளது.

தாய்​மை​யைக் கொண்​டாடும் இந்​தத் தனித்​து​வ​மான இசை நிகழ்ச்​சியை ப்ளாக் ஷீப், நியூஸ் 7, சித்​திரம் தொலைக்​காட்​சி, பிக் எஃப்​.எம். சென்னை சாரீஸ், ப்ர​வோக் ஆகிய நிறு​வனங்​களும் இணைந்து வழங்​கு​கின்​றன. பிரின்ட் பார்ட்​ன​ராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்​துள்​ளது.

இந்​நிகழ்ச்​சி​யில் தாய்​மை​யின் மேன்​மையை உணர்த்​தும் திரை​யிசைப் பாடல்​களை, சைந்​த​வி, கிரேஸ் கருணாஸ், நிவாஸ், ஸ்யாம் உள்​ளிட்ட பின்​னணிப் பாடகர்​களும், மாளவி​கா, இனியா ராஜகு​மாரன், முத்​தமிழன், பிர​பாவதி உள்​ளிட்ட வளரும் இசைக் கலைஞர்​களும் பாட​விருக்​கிறார்​கள்.

மேலும் இந்​நிகழ்ச்​சி​யில் திரைப்பட இயக்​குநர்​கள் வெற்​றி​மாறன், மிஷ்கின், ராஜு​முரு​கன், சுரேஷ் ராஜகு​மாரி ஆகியோ​ரும் சுஹாசினி மணிரத்​தினம், கவுதமி, சேத்​தன், ஆடு​களம் நரேன், தினேஷ், விக்​ராந்த், கலை​ராணி, அனிஷ்​மா, தமிழ், அக் ஷய்​கு​மார், மூணார் ரமேஷ், சிநேகன் போன்ற திரைப் பிரபலங்​களும் பங்​கேற்க இருக்கிறார்கள்.

நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க விரும்​புபவர்​கள் இத்​துடன் உள்ள க்யூஆர் குறி​யீட்டை ஸ்கேன் செய்​து, நுழைவுச் சீட்​டைப் பெறலாம்​.

சென்னையில் ஜூன் 28-ல் ‘அம்மா... உறவல்ல... உணர்வு’ நிகழ்வு
தி.நகரில் ஒரே இடத்தில் பணியாற்றும் 2 பேர் அடுத்தடுத்து கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in