டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழா!

சென்னையில் நாளை நடைபெறுகிறது.
டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழா!
Updated on
1 min read

சென்னை: டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்​தியா வழங்​கும் ‘இந்து தமிழ் திசை - மருத்​துவ நட்​சத்​திரம்’ விருதுகள் வழங்கும் விழா சென்​னை​யில் நாளை (நவ. 27) மாலை நடை​பெறுகிறது. இந்​நிகழ்வை இந்​திய மருத்​துவ சங்​கம், ஜிஆர்டி ஜுவல்​லர்ஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

கிரா​மாலயா தொண்டு நிறு​வனம், லலி​தாம்​பிகை ஃபெர்​டிலிட்டி சென்​டர் ஆகியவை இவ்​விழா​வின் பங்​கு​தா​ரர்​களாக இணைந்​துள்​ளன.

மருத்​து​வப் பணியை சேவை மனப்​பான்​மையோடும், அர்ப்​பணிப்​போடும் ஆற்​றிவரும் மருத்​து​வர்​களைப் பாராட்டி கவுரவிக்​கும் வகை​யில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்​பில் ‘மருத்​துவ நட்​சத்​திரம்’ என்ற சிறப்பு விருதுகள் கடந்த 4 ஆண்​டு​களாக வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்த ஆண்​டுக்​கான விருது வழங்​கும் விழா சென்​னை, திருச்​சி, கோவை என 3 மண்​டலங்​களில் நடை​பெறவுள்​ளது. சென்னை ஆழ்​வார்ப்​பேட்டை டிடிகே சாலை​யில் உள்ள மியூசிக் அகாட​மி​யின் மினி அரங்​கில் நாளை (வி​யாழக்​கிழமை) மாலை 4 மணிக்கு ‘மருத்​துவ நட்​சத்​திரம்’ விருதுகள் வழங்​கப்பட உள்​ளன.

சிறப்பு விருந்​தின​ராக தமிழ்​நாடு சுகா​தா​ரம் மற்​றும் மக்​கள் நல்​வாழ்​வுத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பங்​கேற்​று, விருதுகளை வழங்க உள்​ளார்.

இவ்​விழா​வில், ரெக்​கிட் நிறு​வனத்​தின் தெற்கு ஆசி​யா, MENARP மற்​றும் ஆப்​பிரிக்​கா​வின் தகவல் தொடர்பு மற்​றும் நிறுவன விவ​காரங்​கள் இயக்​குநர் பேராசிரியர் ரவி பட்​னாகர், தமிழ்​நாடு ஐஎம்ஏ தலை​வர் டாக்​டர் பி.செங்​குட்​டு​வன், ஐஎம்ஏ மதிப்​புறு மாநிலச் செய​லா​ளர் டாக்​டர் எஸ்​.​கார்த்​திக் பிரபு, மதிப்​புறு நிதிச் செய​லா​ளர் டாக்​டர் எஸ்​.கவுரி சங்​கர் ஆகியோர் பங்​கேற்க உள்​ளனர்.

இந்த விழா​வில் சென்​னை, செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், ராணிப்​பேட்​டை, வேலூர், விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, திருப்​பத்​தூர், கள்​ளக்​குறிச்சி ஆகிய 10 மாவட்​டங்​களைச் சேர்ந்த 71 மருத்​து​வர்​களுக்கு விருதுகள்​ வழங்​கி, கவுரவிக்​கப்​பட உள்​ளனர்​.

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழா!
காரல் மார்க்ஸை பின்பற்றியவர்கள் இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை அழித்துவிட்டனர்: ஆளுநர் ஆர்​.என்​.ரவி குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in