Last Updated : 19 Nov, 2016 11:02 AM

 

Published : 19 Nov 2016 11:02 AM
Last Updated : 19 Nov 2016 11:02 AM

எங்கே ‘செல்லும்’ இந்தப் பாதை?

«

கம்பீரமாய் நடந்த‌

பெரும்புள்ளியின்

விரலில் இல்லை

கரும்புள்ளி.

«

காக்கா கண்ணுக்கு

மை கொண்டு வா...

என்றான் தமிழன்

விரலுக்கு மை கொண்டுவந்தது

கழுகு!

«

'மாற்றி யோசி'

என்பதன் அர்த்தம்

இப்போதுதான்

முழுமையாகப் புரிகிறது.

«

உட்கார வைத்தோம்

நிற்க வைத்துவிட்டார்கள்.

«

வெறுங்கை என்பது மூடத்தனம்...

இடது கையில் செல்

வலது கையில் செல்லாத நோட்டு!

«

எல்லா ஊர்களும்

திருநின்ற ஊரானது.

«

அன்று சுற்றி நின்று

பார்த்தோம்

இன்று வரிசையில் நின்று

பார்க்கிறோம்

கண் கட்டி ‘மை’ வித்தை!









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x