Last Updated : 10 Nov, 2016 10:18 AM

 

Published : 10 Nov 2016 10:18 AM
Last Updated : 10 Nov 2016 10:18 AM

புலம்ப வச்சிட்டாங்களேப்பா...

மத்திய அரசு 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தாலும் அறிவித்தது, மக்கள் மத்தியில் புலம்பல் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு தரப்பினரும் எப்படி புலம்பியிருப்பார்கள் என்று ஒரு கற்பனை!

குடிகாரர்:

பெட்ரோல் பங்க், மருந்து கடை மாதிரி டாஸ்மாக்குலேயும் 500 ரூபா செல்லும்னு மத்திய அரசு உத்தரவு போட ணும்!

டாக்டர்:

உங்க உடம்புக்கு ஒண்ணும் இல்லை. 500 ரூபாயை மாத்தணும்னா ஒரு ஸ்கேன் எடுத்துட்டு, ரெண்டு நாள் இங்க பெட் ரெஸ்ட் எடுத்துட்டு போங்க !

கந்து வட்டிக்காரர்:

நீங்க அவசரமில்லாம கடனை நூறு ரூபாயாவே கட்டுங்க . நான் வேணா அதுவரைக்கும் வட்டி வாங்காம இருக்கேன். ஐநூறா கொடுத்து எங்க தாலிய அறுக்காதீங்க!

வாக்காளர்:

ஓட்டு போட நமக்கு ஐநூறு எல்லாம் வேணாங்க. ஐ.. நூறுன்னு சொல்ல நூறு ரூபாயா கெடச்சா போதும் !

அரசியல்வாதி:

பொதுமக்கள் தங்கள் கையிலுள்ள 500, 1000 ரூபாய் நோட்டை மாற்றும் வரை இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டுகிறேன்.

நகை கடைக்காரர்:

இதுக்குத்தான் அப்போவே நாங்க கரன்சியா வச்சிருக்காம தங்கமா வாங்கி வச்சுக்கோங்கன்னு சொன்னோம்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x