Last Updated : 17 May, 2015 11:00 AM

 

Published : 17 May 2015 11:00 AM
Last Updated : 17 May 2015 11:00 AM

சொல்லத் தோணுது 34 - எதைப் பார்த்து சிரிக்கிறார்கள்?

அரசியல் என்பது என்ன? புதிது புதிதாக எதற்காக கட்சிகள் தொடங்கப்படுகின்றன? அந்தக் கட்சிக்குள் இருப்பவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? தொடங்குபவர்களின் தகுதியும், அற்குள் இணைந்து கொள் பவர்களின் தகுதியும் என்ன? மக்கள் முன்னேற்றத்துக்காக எனத் தொடங் கப்பட்ட கட்சிகளும் யாரையெல்லாம் முன்னேற்றின? தலைமுறை தலைமுறை யாகத் தொடர்ந்து செய்துவந்த தொழில் கள் எல்லாம் அழிக்கப்பட்டு, எல்லாத் தொழில்களையும் தனது காலடியில் போட்டுக்கொண்ட அரசியல்... இன்று பெரும் தொழிலாக மாறிப் போனதன் காரணங்கள் என்ன?

காலையில் கண்விழித்து நாளேடு களைப் பார்த்தாலோ மற்றும் தெருக்கள், சாலைகளுக்கு சென்றாலோ அங்கெல்லாம் அரசியல் கட்சிகளின் பெயர்களும், தலைவர்கள், குட்டித் தலைவர்களின் பெயர்களும் படங்களும் நிரம்பி வழிகின்றன. அந்தப் படங்களில் எல்லாம் அவர்கள் மக்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சிற்றூர்கள், சிறு நகரங்கள், நகரங் கள், பெருநகரங்கள், தலைநகர் என ஒவ்வோர் இடத்திலும் அரசியல்வாதி யாக இருப்பவரின் தோற்றம், வளர்ச்சி, அவர்களின் செயல்பாடு என எல்லா வற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

தங்களுடனேயே சுற்றித் திரிந்தவர் கள் வளர்த்துக் கொண்ட வசதிகளும், செல்வாக்கும், சொத்துக்களும் எங்கி ருந்து வந்தன என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும். அரசியலில் நுழைந்து காலடி எடுத்து வைக்கும்போது அவர்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களின் குடும் பம் என்ன தொழிலைச் செய்து, எவ்வளவு வருமானத்தைப் பெற்றது? எவ்வளவு சொத்து இருந்தது என்பதெல்லாமும் தெரியும். குடும்பத்தில் உள்ள ஒருவர் கூட எந்தத் தொழிலையும் செய்யாமல் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன என்பதும் மக்களுக்குத் தெரியும்.

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி, முதலமைச் சர் பதவி, பிரதமர் பதவி என எல்லாவற்றுக்கும் சம்பளம் எவ்வளவு கிடைத்தது? செலவுகள் போக மீதி எவ்வளவு இருக்கும் என கணக்குப் பார்த்தால், இந்நாட்டில் எத்தனை பேர் நேர்மை யாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். ஆனால், தங்கள் பதவிக்காக தரப்பட்ட ஊதியத்தில் மட்டுமே நேர்மையோடு அரசியல் வாழ்வை மேற்கொண்டவர்களும் இருக் கின்றனர். ஏனெனில், அவர்கள் அரசியலை தொண்டாக மதித்தவர்கள்.

யார் யார் பெயரிலோ, எந்தெந்த நாட்டிலோ அரசியல்வாதிகள் மறைத்து வைத்திருக்கும் சொத்துக்களை எல் லாம் பிடுங்கினால் உலகத்திலேயே இந்தியாவே பணக்கார நாடு. ஒரு ரூபாய் கூட மக்களிடத்தில் வரி விதிக்காமல் 50 ஆண்டுகள் சிறந்த ஆட்சியை நடத்தலாம். அரசியலில் வெற்றிபெற்றவர்கள் மட்டு மில்லை; தோற்றவர்களும் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு நம் நாடுதான். ஆனால், மக்களாட்சி மலர்ந்து மக்களுக்குக் கிடைத்ததெல்லாம் நோய் களும் ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமைகளும்தான்.

எவ்வாறு கட்சித் தொடங்குவது? எவ் வாறு மக்களைத் திரட்டுவது? எவ்வாறு தலைவனாக உருவெடுப்பது? எவ்வாறு மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது? அதன் மூலம் காவல்துறை, சட்டத் துறை, நீதித் துறையை வளைப்பது? பின், இந்த பணத்தைக் கொண்டு எவ்வாறு மக்களை விலைக்கு வாங்குவது என்பதெல்லாம் அறிந்த அரசியல்வாதிகள், நம் நாட்டைத் தவிர வேறெங்கிலும் இல்லை.

மக்களை மேம்படுத்த உருவான ஜனநாயகம் எனும் மக்களாட்சி, இந்த 67 ஆண்டுகளில் கண்டதெல்லாம் மக்களின் அடிப்படை வசதியான கழிப்பிடம் கூடம் 63 கோடி மக்களுக்கு இல்லாமல் வைத்திருப்பதுதான்!

தன்னலவாதிகள் அரசியலுக்குள் நுழைந்ததால், அரசியல் என்பது ஒரு தொண்டாக இருந்ததுபோய், வெறும் தொழிலாக மாறிப் போனது. பிழைப்பு வாதிகள் செய்யும் அரசியல் தொழிலுக்கு, தொண்டர்கள் எனும் பெயரில் அதே போன்ற பிழைப்புவாதிகளே தேவைப்படு கிறார்கள். அரசியல்வாதிகள் எப்படியெப் படியோ பணம் சம்பாதிப்பதையும், அப்படி சம்பாதிப்பது தண்டனைக்கு உள்ளாவது இல்லையென்பதையும் பார்க்கும் தொண்டனும், தானும் அதே வழியில் சம்பாதிக்க, அதே அரசியலை பயன்படுத்துகிறான்.

எந்தத் தொழிலில் இன்று இழப்பு வந்தாலும் அரசியல் தொழில் மட்டும் வருமானம் தரும் தொழிலாக பரிணாமம் பெற்றிருக்கிறது.

தங்களின் குழப்ப நிலையால் முடிவெ டுக்கத் தெரியாமல், ஒவ்வொரு முறை யும் எதிர்காலத்தில் எந்த முன்னேற்றத் தையும் காணாத கட்சிகளில் மாறி மாறி சேர்ந்து, குடும்பத்தை கவனிக்காமல் சொத்துக்களை இழந்து, குடிகாரர்களாக மாறி கடைநிலைத் தொண்டனாக செத் துப் போகிறவர்களின் பட்டியலும் இதில் ஏராளம்.

கட்சித் தலைவர்களின் பகை உணர்ச்சி களுக்குள் சிக்கிக் கொண்டு அவர்கள் அடிக்கடி எடுக்கும் தவறான முடிவுகளால் வாழ்க்கை திசைமாறி எதிர்காலத்தை இழந்து நிற்பவர்களும் ஏராளம். இப்படிப் பட்ட பிழைப்புவாதிகள் மற்றவர்களிடம் தாவிவிடக் கூடாது என்பதற்காகவே அவ்வப்போது சுறுசுறுப்பை ஏற்றி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் பொதுக்குழுக் கூட்டங்களும், கட்சி மாநாடுகளும் நடத்தப்படுகின்றன.

இதுமட்டுமின்றி யாராவது இறந் தாலோ, குற்றம் உறுதி செய்யப்பட்டு பத வியை இழந்தாலோ, இடைத் தேர்தல் வந்தாலோ… அது பெரும் கொண் டாட்டமாகிவிடுகிறது. தேர்தலுக் குத் தயாராகும் காலங்களில் இருந்தே பிரியாணிப் பொட்டலங்களுக் கும், மதுவுக்கும், செலவுக்குப் பணத்துக் கும் குறைவிருக்காது. போதை ஊசி ஏற்றப்பட்டதுபோல் தலைவரின் புகழ் பாடி வளர்பவர்கள் அவர்களை கடவு ளுக்கு இணையாகப் பார்க்கிறார்கள். ஊழல்வாதிகளாகவும், குற்றவாளி களாகவும் சொல்லப்படுவதை அவர் களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் நாக்கை அறுத்து, மொட்டையடித்து, சிலவேளைகளில் பலர் உயிரையும் மாய்த்துக் கொண்டுவிடுகிறார்கள்.

அரசியல் நமக்கான இடமில்லை என படித்தவர்களெல்லாம் விலகிப் போய் விடுகிறார்கள். நேர்மையானவர்கள் பழி வாங்கப்படுவதையும், கொலை செய்யப் படுவதையும் கண்டு, வாக்களிப்பது மட்டுமே தங்களின் கடமை என மக்களும் இருந்துவிடுகிறார்கள்.

‘நேர்மையான என் தலைவன் பின் னால்தான் என் வாழ்க்கை’ என தன் கட்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட என் அண்ணன், இரவு பகலாக அந்தக் கட்சிக்காகவே உழைத்தார். குறுக்கு வழியில் போகப் பிடிக்காமல் தன் சொத்துக்களை எல்லாம் இழந்து, குடும்பத்தைக்கூட கவனிக்காமல் ஏழை யாகவே மாண்டு போனார். அவரின் மகன் ஒருவன் அரசு மதுபானக் கடையில் பணியாளனாக மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். மற்றொருவன் வரப் போகும் தேர்தலுக்காக அதே கட்சிக்காக ஊர்ப் பகுதியில் எல்லா சுவர்களிலும் பெயரெழுதி இடம்பிடித்துக் கொண்டிருக்கிறான். நாட்டின் எந்த மூலைக்கு பயணித்தாலும் இவ்வாறான தொண்டர்களால் வரையப்பட்ட கட்சித் தலைவர்கள் மக்களைப் பார்த்து சிரித் துக் கொண்டேயிருக்கிறார்கள். எதற் காக இப்படி சிரிக்கிறார்கள் என எனக் குத் தெரியவில்லை. உங்களையெல் லாம் நோயாளிகளாக, தன்மானம் இழந்த வர்களாக, குடிகாரர்களாக, சிந்தித்து வாக்களிக்கத் தெரியாதவர்களாக, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்களாக தொடர்ந்து வைத்துக் கொண்டிருக் கிறோமே என்பதற்கான சிரிப்பாக இருக் குமோ? நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

- இன்னும் சொல்லத் தோணுது!
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
thankartamil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x