Last Updated : 10 Apr, 2018 05:04 PM

 

Published : 10 Apr 2018 05:04 PM
Last Updated : 10 Apr 2018 05:04 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டம் - எதுக்கு முக்கியத்துவம் தரப் போறீங்க?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Shereen Basharath

‏வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது. அரசு அமைதி வழியில் மாணவர்கள் மெரினாவில் #காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட அனுமதி வழங்க வேண்டும். அதில் நிச்சயம் தீர்வு கிடைக்கும். ஜல்லிக்கட்டுக்கு கிடைத்தது போல

Ramarajan Govindaraj

‏புரிதல் இல்லாமல் போசும் கிரிக்கெட் ரசிகர்கள் எங்களின் எண்ணம் விளையாட்டிற்கு தடை அல்ல எதிர்ப்பை பதிவு செய்து சர்வதேச கவனத்தை ஈர்ப்பது

SHANKAR CHIYAAN KXIP

‏மேட்ச் நடக்கலனா 2 டீம்க்கும் பாயிண்ட் பிரிச்சு கொடுத்திடுவாங்க..  ஆனா நீங்க கேட்ட காவிரி தண்ணிய பிரிச்சு தர மாட்டாங்க.

 

Susee Maha

‏தமிழ்நாட்டில் இப்பொழுது காவேரி issue va இல்ல IPL issue va nu தெரியல..

இது என்னமோ அரசியல்வாதிங்கதான் IPL பக்கம் திருப்பி விட்டாங்கனு தோனுது      

SIVARAJ NAGARAJAN    

‏நாம் அனைவரும் கிரிக்கெட்டைப் புறக்கணிப்பதற்கு பதில் டாஸ்மாக்கை புறக்கணித்தால்

நாடும் நல்லா இருக்கும்

வீடும் நல்லா இருக்கும்

நம்ப எதிர்ப்ப கடுமையா தெரிவித்த மாறியும் இருக்கும்.

பொள்ளாச்சி நிவாஸ்

‏இன்று  IPL ஐ டிவியில் பார்க்கவுள்ளேன்.

காலியான‌ இருக்கைகள் என் இனத்தின் கோபத்தை வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையில்....

 

Santharam.G

‏விளையாட்டுல நல்ல அறுவடை

விவசாயத்துல டக்கவுட்

எதுக்கு முக்கியத்துவம் தரப் போறீங்க?

 

VASANTH

மனுஷன் படைச்சதிலயே உருப்படியான ரெண்டே விசயம் சோறு, கிரிக்கெட், இதுல ஒண்ண சொல்ல சொல்றாங்க சரி சொல்லிடுவோம் சோறு தான்.

கயல்

சென்னை நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு தருகிறது

 

Asusual idiot

தமிழக இளைஞர்கள் கிரிக்கெட் மைதானத்தில் செல்லாமல் இருப்பதே சிறந்த எதிர்ப்பு.

உமா சங்கர்

நான் இன்றைய போட்டியை boycott செய்து விட்டேன், சரி அடுத்து? உடனே BCCI காவிரியை தந்துவிடுமா?இப்படி சினிமாவையும் விளையாட்டையும் எளிய target ஆக்கி நம்மை அலைகிழிக்கும் அரசியலையும்/வாதிகளையும் தான் நாம் முற்றுகையிட வேண்டும்.

விளையாட்டை அரசியலாக்காதீர். அப்புறம் என் வெங்காயத்திற்கு பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களை மட்டும் ஐபிஎல் விளையாட்டில் சேர்த்துக் கொள்வதில்லை! நீங்க மட்டும் விளையாட்டில் அரசியல் செய்யலாம் நாங்க செய்யக்கூடாதா?

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x