Published : 04 Nov 2019 09:32 PM
Last Updated : 04 Nov 2019 09:32 PM

இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் - எந்தக் கிழமையில் என்னென்ன பலன்கள்  திருவோணம் முதல் ரேவதி வரை - நவம்பர் 4 முதல் 10 - ம் தேதி வரை

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நட்சத்திர வாரபலன்களில் பொதுப் பலன் என்னும் பகுதியில் நான் குறிப்பிடும் கிழமைகளின் பயன்பாடு என்பது மிக முக்கியமானது. இது "தார பலம்" என்பதாகும்.
இந்த தாரபலமானது மனித வாழ்க்கையின் நடைமுறைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது நிதர்சனமான உண்மை. பலன்களை நீங்கள் அனுபவிக்கும் போது தான் அதன் மகிமை பற்றி தெரிந்து கொள்வீர்கள். நான் குறிப்பிடும் கிழமைகளை சரியாக பயன்படுத்தி வெற்றிகளை குவித்திடுங்கள். வாழ்த்துக்கள். நன்றி.

திருவோணம் -
எல்லா முயற்சிகளும் வெற்றியை கொடுக்கப் போகிறது. எனவே எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொத்து சேர்க்கை இயல்பாக நடக்கும். வீட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். அல்லது புதிய வாகனம் ஒன்றை வாங்குவீர்கள் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்பொழுது நடந்தேறும்.
இப்பொழுது மகாலட்சுமி யோகம் நடைபெறுவதால் எல்லா விதமான செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும். தடைகள் அகலும் நினைத்ததை நினைத்த மாதிரியே செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகம் -
வேலையில் கலகலப்பாக இருப்பீர்கள். கொடுத்த வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலகம் விஷயமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பணிநீட்டிப்பு கிடைக்கும். நிரந்தர குடியுரிமை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அயல் நாட்டில் சொத்து வாங்கும் யோகமும் உண்டு. அரசு ஊழியர்களாக இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் உண்டு. ஒழுங்கு நடவடிக்கைகள் ஏதும் இருந்தால் அது கைவிடப்படும். வேலை இல்லாதவர்களுக்கு அருமையான வேலை இப்பொழுது அமையும். கல்வித் தகுதிக்கு குறைவான பணியில் இருப்பவர்களுக்கு இப்பொழுது நிறைவான பணி கிடைக்கும். சேவை சார்ந்த தொழில் செய்வோர் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

தொழில் -
நல்ல வளர்ச்சி ஏற்படும். பலவித உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி தொழில் பிரம்மாண்ட வளர்ச்சி அடையும். அரசு வழியில் இருந்த நிர்ப்பந்தங்கள் விலகும். அரசின் சலுகைகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த வங்கி கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய தொழில் ஒன்றை தொடங்குவீர்கள் கிளை நிறுவனங்களை ஆரம்பிப்பீர்கள். புதிதாக தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்புகள் அமையும் தொழில் தொடங்க இடம் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல இடம் அமையும். ஆடை உற்பத்தியாளர்கள் அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்துவீர்கள். அல்லது புதுமையாக மாற்றி அமைப்பீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரம் பெருகும் பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு சரிவிலிருந்து மிகப்பெரிய ஏற்றம் பெறுவீர்கள்.
பெண்களுக்கு
மனம் மகிழும் வாரம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வேலையில்லாத பெண்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். நீண்டநாள் உடல் உபாதைகள் இப்பொழுது தீரும். சொத்து சேர்க்கை ஏற்படும் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு -
கல்வியில் முன்னேற்றம் உண்டு . தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். உயர்கல்வி கற்பவர்களுக்கு தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும். சாதனை படைப்பீர்கள்.
கலைஞர்களுக்கு -
பலவித ஒப்பந்தங்கள் ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும் சொத்து சேர்க்கை ஏற்படும். உங்கள் துறை சார்ந்த பயிற்சி மையம் ஆரம்பிக்க வாய்ப்புண்டு.
பொதுப்பலன் -
நல்ல நேரம் நடக்கும்போது சேமிப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும். சொத்துக்களை வாங்க வேண்டும். நல்ல முதலீடுகள் செய்ய வேண்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் அகலும். நீண்ட நாள் பாடாய் படுத்திய நோய் சட்டென்று காணாமல் போகும். தூரத்து உறவினரின் சொத்துக்கள் உங்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. நண்பர்களாலும் உறவினர்களாலும் அதிக நன்மை ஏற்படும்.
இந்த வாரம் .-
திங்கள் - பயணங்கள் அதிகரிக்கும். இடமாற்ற சிந்தனை உருவாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்க வேண்டும்.
செவ்வாய் - சொத்து சம்பந்தமான ஆதாயம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியை பெரும் சாதனைகள் பல புரிவீர்கள்.
புதன் - பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாதீர்கள். அது உங்களுக்கு தலைவலியாக வந்து சேரும்.
வியாழன் - ஆதாயங்கள் பெருகும். ஆரோக்கியம் சீராகும். கடன்களை அடைப்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.
வெள்ளி -நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் சில செயல்களை செய்வீர்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பீர்கள்.
சனி- உடல் உபாதைகள் தீரும் மருத்துவச் செலவுகள் குறையும். நோயில் இருந்து விடுதலை கிடைக்கும் .செல்வச்செழிப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும் பெரிய கடனை அடைக்க வழிவகை கிடைக்கும்.
ஞாயிறு - நாள் முழுவதும் அமைதியாக இருப்பது நல்லது. நீங்கள் எதைச் செய்தாலும் அது மற்றவர்களுக்கு எரிச்சலை கோபத்தையும் உண்டாக்கும். கிண்டலான பேச்சுக்கள் வேண்டாம்.
வணங்கவேண்டிய தெய்வம் - திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாளை வணங்கி வாருங்கள். ஒருமுறை அவரை தரிசித்து வாருங்கள். நன்மைகள் நடக்கும் செல்வ வளம் கொழிக்கும்.

**************************************************************
அவிட்டம் -
வரவுகள் தாராளமாக இருக்கும். அதே சமயம் செலவுகளும் இருக்கும். சேமிப்பிலிருந்து ஒருபகுதியை வீட்டுச் செலவுக்காக செய்ய வேண்டியது வரும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் வாகனச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தொலைதூரப் பயணம் ஒன்று ஏற்படும். அரசு வழியில் ஒரு ஆதாயம் ஏற்படும். அல்லது வங்கிக் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைத்து புதிய கடன் ஒன்றைப் பெறுவீர்கள். அடகு நகைகளை மீட்பீர்கள். முயற்சிகள் கடைசிநேரத்தில் வெற்றியாகும்.
உத்தியோகம் -வேலையில் பணிச் சுமைகள் இருக்கும். ஆனால் அதன் பாதிப்புகள் தெரியாது. மிக எளிதாகவே இருக்கும் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியாமல் கடைசி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இடமாற்றம் ஏற்படும். வேலையில் ஒரு மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். பதவி உயர்வு சற்று தாமதமாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டு வேலை இந்த வாரம் உறுதியாகும். சேவை சார்ந்தவேலைகளை செய்பவர்கள் ஆதாயம் கிடைக்கும் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். விற்பனைப் பிரதிநிதிகள் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் இலக்குகளை கடைசி நேரத்தில் பெறுவார்கள்.
தொழில் -தொழில் வளர்ச்சி ஓரளவுக்கு இருக்கிறது. ஒருசிலர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபங்கள் ஓரளவுக்கு இருக்கிறது புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் இப்போது தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. ஊழியர்களுக்கு தேவையான சௌகரியங்களை செய்து கொடுக்க முன் வருவீர்கள். ஒரு சிலருக்கு வாகன வசதிகளையும் செய்து தருவீர்கள். ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களுக்கு வளர்ச்சி உண்டாகும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். முதலீட்டு துறையில் இருப்பவர்களுக்கு முதலீடுகள் ஓரளவுக்கு வந்து சேரும். சிறு வியாபாரிகள் அதிக லாபம் பெறுவார்கள். மொத்த வியாபாரிகள் அதிக ஆர்டர்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டு. ஏற்றுமதி தொழிலில் நல்ல லாபம் பெறும்.
பெண்களுக்கு - மன மகிழ்ச்சி உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆண் வாரிசு இல்லை என்கிற கவலை இப்பொழுது தீரும். அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சொத்து சம்பந்தமான பிரச்சினை சுமூகமாக தீரும்.


மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு. தோல்வியடைந்த பாடங்களை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். உயர்கல்வி முயற்சி கை கூடும்.
கலைஞர்களுக்கு - வாய்ப்புகள் பலவாறாக வந்து சேரும். ஒரு சிலருக்கு ஒப்பந்தங்கள் ஏற்படும். அயல்நாடு செல்லும் யோகம் உண்டு. சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு.
பொதுபலன் - நன்மைகள் அதிகமாகவும் தீமைகள் குறைவாகவும் இருக்கிறது. எனவே அதிகம் கவலை வேண்டாம். சொந்த வீடு கனவு நனவாகும். ஒரு சிலருக்கு சேமிப்புகள் கரைந்தாலும் அது சுப நிகழ்ச்சிக்கானதாகவே இருக்கும். வீண் விரயங்கள் இருக்காது. எனவே கவலை தேவையில்லை. கடன்கள் தீர வழி வகை கிடைக்கும். ஒரு பெரிய கடனை அடைத்து ஒரு புதிய கடன் பெறுவீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் - தொலைதூரப் பயணங்களால் லாபமும் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும் .ஒரு சிலர் பரிந்துரையின்பேரில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
செவ்வாய் -இடமாற்ற சிந்தனை உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும். குழப்பங்கள் அதிகரிக்கும் ஒரு சில முக்கிய முடிவுகளை தாமதமாக இருப்பீர்கள் எடுப்பீர்கள்.
புதன் - வருமானம் கூடும் முயற்சிகள் வெற்றிபெறும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். தன வரவு தாராளமாக இருக்கும். வெற்றிகரமான நாள்.
வியாழன் - பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண்விவாதங்களில் ஈடுபடக் கூடாது. முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது. அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பழுது உண்டாகும்.
வெள்ளி - சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் லாபம் உண்டாகும். கமிஷன் அடிப்படையில் உங்களுக்கு நல்ல தொகை கைக்கு வந்து சேரும்.
சனி- இன்று எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அல்லது மற்றவர்களுக்கு இருக்கும். செய்து கொடுத்தோம் என்ற திருப்தி மட்டுமே மிஞ்சும்.
ஞாயிறு - கடன்கள் தீர வழி வகை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். திடீர் பணவரவு உண்டு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் - பத்ரகாளி அம்மனை வழிபடுங்கள். அல்லது உக்கிர தெய்வமான பிரத்யங்கிரா தேவியை வணங்கி வாருங்கள். நன்மைகள் பெருகும். எதிர்ப்புகள் அகலும். கடன்கள் தீரும்.

****************************************************
சதயம் -
நன்மைகள் அதிகம் ஏற்படும். லாபகரமான செயல்களை மட்டுமே செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் குடும்பத்தில் அமைதி நிலவும். ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கும் .நிச்சயதார்த்தம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். ஒரு சில நண்பர்கள் உங்களுக்கு உதவ ஓடோடி வருவார்கள்.
உத்தியோகம் -
உத்தியோகம் பெரிய பிரச்சினை ஏதுமில்லை. கவலைகள் வேண்டாம். வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். பிணிகள் அகலும். உங்களைப் பற்றி குறை குற்றம் சொல்லியவர்கள் அதை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள். உங்கள் மீது அபிப்ராயம் உயரும் . இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் முயற்சி முழு வெற்றியைத் தரும். அயல்நாட்டில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு பணிநீட்டிப்பு கிடைக்கும். சேவை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இப்பொழுது நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு ஆதாயங்கள் அதிகம் உண்டாகும். இலக்குகளை மிக எளிதாக எட்டுவார்கள். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும் .
தொழில் - தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்கும் சிந்தனை ஏற்படும். உங்கள் தொழில் சார்ந்த இன்னொரு இணை தொழிலை செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. அதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். அதற்கான ஒத்துழைப்பு கிடைக்கும். சிறந்த ஆலோசகர்கள் கிடைக்கப் பெறுவார்கள். மொத்தத்தில் மிகச்சிறப்பான வாரமாக இது இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு வளர்ச்சிப் பாதை நோக்கி செல்லும். பங்கு வர்த்தக துறை நல்ல ஏற்றம் பெறும். கமிஷன் ஏஜெண்டுகள் நிறைய லாபம் பார்ப்பார்கள்.
பெண்களுக்கு - மகிழ்ச்சி நிறைந்த வாரம் . குடும்பத்தில் அமைதி நிலவும். சொத்து சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். அதற்கான நேர்முகத்தேர்வு பணியாணை இந்த வாரம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு . தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். உயர் கல்வி கற்பவர்கள் புதிதாக ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து படிப்பார்கள் சிறப்பான வாரம் .
கலைஞர்களுக்கு - ஒப்பந்தங்கள் பலவாறாகக் கிடைக்கும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. சொத்து சேர்க்கை ஏற்படும். சொந்த வீடு வாங்குவீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நண்பர் ஒருவரால் மிகப் பெரிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறும்.
பொதுப்பலன் - நன்மைகள் அதிகமாக இருப்பதால் சேமிப்புகளை பராமரியுங்கள். சொத்துக்களை வாங்க முயற்சி செய்யுங்கள். கடன்களை தீர்க்க வழி வகை கிடைக்கும். வங்கிக்கடன் ஒன்று கிடைக்கும். இதுவரை வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு தொலைதூரம் செல்லும் வாய்ப்பு உண்டு. அது வெளிநாடாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.


இந்த வாரம் -
திங்கள் -நன்மைகள் அதிகமாக நடக்கும். வெளிநாட்டு பயண முயற்சிகள் வெற்றிபெறும். நண்பர்கள் உதவுவார்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
செவ்வாய் - அயல்நாடு செல்வது உறுதியாகும். அதற்கான விசா இன்று கிடைக்கும் பணவரவு உண்டு.
புதன் - மறதி அதிகமாகும். அலைச்சல் அதிகரிக்கும். குழப்பங்கள் ஏற்பட்டு தீர்வுகள் கிடைக்கும்.
வியாழன் - வருமானம் அதிகமாகும். எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். அனைத்து விஷயங்களும் சாதகமாக மாறும். வெற்றிகள் குவியும் .
வெள்ளி - அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பழுது ஏற்படும். மனதில் தேவையற்ற குழப்பங்களும் பயமும் உண்டாகும். திடமான சிந்தனை தேவை.
சனி - சொத்துக்களால் ஆதாயம் உண்டு .தன வரவு திருப்திகரமாக இருக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும் மருத்துவச் செலவுகள் குறையும்.
ஞாயிறு -இன்று செய்கின்ற வேலைகள் அனைத்தும் குடும்பத்தினருக்காக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கண்டாலும் அதன் பலன் உங்களுக்குக் கிடைக்காது.
வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்கி வாருங்கள் கூடுதல் நன்மைகள் நடக்கும் தடைகள் அகலும். செல்வவளம் ஏற்படும்.

****************************************************
பூரட்டாதி -
இடமாற்றம் ஏற்படும். வீடு மாற்றம் ஏற்படும் பணியிடத்தில் ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருசிலருக்கு அலுவலகத்தில் நெருக்கடிகள் உண்டாகும். வேறு வேலைக்கு மாறும் எண்ணம் அதிகரிக்கும் . குடும்பத்தில் சில பிரச்சினைகள் உருவாகி மறையும். குழப்பமான சூழ்நிலைகள் இருக்கும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உத்தியோகம் -
வேலையில் நெருக்கடிகள் உண்டாகும். வேலையை விட்டு விலக வேண்டிய அளவுக்கு நிர்ப்பந்தங்கள் அதிகரிக்கும் - உயரதிகாரிகள் ஆதரவு தரமாட்டார்கள். வேறு வேலைக்கு மாறுவதே நல்லது. அதிலும் வெளிநாடு செல்வது மிகவும் நல்லது. இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் வரும் பலத்த போட்டிக்கு இடையே தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் ஆதாயம் குறையும்.
தொழில் -
தொழிலை இப்போது இருக்கும் நிலையிலேயே தொடர்வது நல்லது. விரிவு படுத்துகிறேன் என்று அகலக்கால் வைக்க வேண்டாம். கூட்டாளிகள் யாராவது பிரச்சினைகளை உண்டுபண்ணுவார்கள். அவரை விலக்கி விடுவது நல்லது. தொழில் மந்தநிலையில் இருந்தாலும் வருமானம் குறை இருக்காது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். தொழில் சார்ந்த வழக்குகள் தள்ளிப்போகும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
பெண்களுக்கு -

பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும் . குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும் திருமண முயற்சிகள் கைகூடும். அதேசமயத்தில் புதிய நபர்களின் தொடர்பு தேவையற்றது. அப்படியான நட்புகளை நிராகரிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு -
கல்வியைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் நாட்டம் ஏற்படும். நண்பர்களோடு சேர்ந்து சுற்றுலா செல்ல எண்ணம் ஏற்படும். கல்வியில் தேவையான கவனத்தை செலுத்துங்கள்.


கலைஞர்களுக்கு -
அமைதியாக இருப்பது நல்லது. உங்களுடைய சுய இரக்கம் மற்றவர்களால் கேலி செய்யப்படும். எனவே பொறுமையாக இருந்தால் நல்ல வாய்ப்புகள் தானாக கிடைக்கும்.
பொதுப்பலன் -
சமூகவலைதள பயன்பாடுகளை குறைத்துக்கொள்ளவேண்டும். தேவையற்ற கருத்துக்களை சொல்ல வேண்டாம். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். வீடு மாற்றம் அல்லது வீடு விற்பது போன்ற எண்ணங்கள் உருவாகும். இப்பொழுது சொத்துக்களை விரயம் செய்ய வேண்டிய காலகட்டம். எனவே யோசித்து கவனமாக விற்பனை செய்யுங்கள். அது ஒருவகையில் உங்களுக்கு நன்மையை தரும்.
இந்த வாரம் -
திங்கள் - அமைதி காப்பது நல்லது அவஸ்தைகள் அதிகமாகும். நெருக்கடிகள் அதிகமாக இருக்கும் ஆலய வழிபாடு அமைதியைத் தரும்..
செவ்வாய் -நன்மைகள் நடக்கும். உதவிகள் தேடி வரும் பணவரவு உண்டு.
புதன் -அயல்நாடு செல்லும் முயற்சி வெற்றிபெறும். தனவரவு திருப்தி தரும் பலவித உதவிகள் தானாக தேடி வரும்.
வியாழன் - குழப்பமான மனநிலை உருவாகும். சிந்தனை ஆற்றல் குறையும் தெளிவில்லாமல் சில முடிவுகளை எடுத்து தடுமாறுவீர்கள்.
வெள்ளி -தனவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
சனி - அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆதாயங்கள் குறையும். அமைதியாக இருப்பது நல்லது. கருத்துக்களை சொல்கிறேன் என்று பிரச்சினைகளில் சிக்க வேண்டாம்.
ஞாயிறு - பணவரவு உண்டு. ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். சொத்து சம்பந்தமான ஒரு பிரச்சினை முடிவுக்கு வரும். சொத்து வாங்குவது அல்லது விற்பது நன்மை பயக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் - வீட்டுக்கு அருகில் உள்ள பசு மடத்திற்குச் சென்று பசுக்களுக்கு உணவளியுங்கள். கோ பூஜை செய்யுங்கள். அதிக நன்மைகளைப் பெறலாம். குழப்பங்களிலிருந்து வெளிவரலாம். சிக்கல்கள் தீரும்.

******************************************
உத்திரட்டாதி -
கடந்த வாரம் வரை நிறைய நன்மைகள் நடந்தது. இந்த வாரம் சற்று மந்தமான வாரம் என்றுதான் சொல்லவேண்டும். மனக் கவலைகள் அதிகரிக்கும். மனம் எதையோ இழந்தது போல் தவிக்கும். நல்ல நண்பர்களை பகைத்துக் கொள்வீர்கள். வீடு மாற்றம் ஏற்படும். இட மாற்றங்கள் ஏற்படும். சொத்துக்களை விற்க முற்படுவீர்கள்.
உத்தியோகம் -
வேலையில் நிம்மதி இருக்காது. நிறுவனமே உங்களை வேலையிலிருந்து விலகச் சொல்லும். இப்போது இருந்தே வேறு வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பியுங்கள். இப்போது பணி மாற்றம் அவசியம். அதுவும் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது போன்ற வேலை கிடைப்பது நல்லது. அது உங்களை பக்குவப்படுத்தும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது நேர்முகத் தேர்வு நடக்கும் பலத்த போட்டிக்கு இடையே வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. சேவை சார்ந்த வேலை செய்வோர் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களால் முடிகின்ற வேலைகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
தொழில் -
தொழில் வளர்ச்சி உண்டு. அதே சமயம் சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில் செய்யும் இடத்தை மாற்ற நினைப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஊழியர்கள் ஒத்துழைப்பு குறையும். எதிர்பார்த்த வங்கிக் கடன் தள்ளிப்போகும். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்கள் பங்குகளை கவனமாக கையாளுங்கள் இல்லையென்றால் சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் லாபத்தை குறைத்துக் கொள்ள முன்வருவீர்கள். அது ஓரளவு கைகொடுக்கும்.
பெண்களுக்கு -
குடும்பத்தில் அமைதி நிலவும். அதேசமயம் உறவினர்களிடம் தேவையற்ற பிரச்சினைகள் எழும். பெரிய ஆசைகளை கைவிடுங்கள். சமூக வலைதள பயன்பாட்டில் இருந்து விலகி இருங்கள். புதிய நண்பர்களை தவிர்த்து விடுங்கள் அவர்களால் பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது.
மாணவர்களுக்கு -
கல்வியில் கவனம் வேண்டும். கவனச்சிதறல் உண்டாகும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காது.
கலைஞர்களுக்கு -
பொறுமையாக இருந்தால் காலம் கனியும். அதுவரை அமைதி காப்பது நல்லது. பணவரவு நண்பர்களால் கிடைக்கும். தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
பொதுப்பலன் -
நிதானமாக இருந்தால் எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். நிதானம் தவறினால் அனைத்தும் உங்களுக்கு எதிராகப் போகும். எனவே பொறுமையாக இருப்பது நல்லது .சொத்து விரயம் ஒன்று ஏற்படும். மருத்துவச் செலவுகள் ஓரளவு கட்டுப்படும்.


இந்த வாரம் -
திங்கள் - தனவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். ஒரு புதிய கடன் ஒன்றை வாங்குவீர்கள்.
செவ்வாய் - அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருங்கள். நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்களுக்கு தலைவலியாக இருக்கும்.
புதன் -வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். பயணங்கள் அதிகரிக்கும். பயணத்தால் லாபம் உண்டாகும். தனவரவு உண்டு.
வியாழன் - வெளிநாடு செல்லும் முயற்சி முழுவதும் வெற்றியாகும். அதற்கான விசா இப்போது கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
வெள்ளி - அர்த்தமற்ற சிந்தனைகள் உருவாகும். குழப்பங்கள் நீடிக்கும் மறதி அதிகமாகும்.
சனி- பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
ஞாயிறு - அமைதியாக இருப்பது நல்லது. நண்பர்களோடு ஊர் சுற்ற வேண்டாம். தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும். மன வருத்தங்கள் ஏற்படும் சிலருக்கு மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தும்.
வணங்க வேண்டிய தெய்வம் - ஆனைமுகத்தானை வணங்குங்கள். அருகம்புல் மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யுங்கள். தடைகள் அகலும். குழப்பங்கள் தீரும். மனநிறைவு உண்டாகும். மன நிம்மதி ஏற்படும்.

*************************************************************
ரேவதி -
முயற்சிகள் அனைத்தும் கடைசி நேரத்தில் வெற்றியாகும். இருந்தாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமல் தடுமாறுவார்கள். வேலையில் இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலர் வேலையை விட்டுவிட்டு மாற்று வேலைக்கு செல்வீர்கள். குடும்ப உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் பகை பாராட்ட வேண்டாம். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.

உத்தியோகம் -
வேலையில் இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு தாமதப்படும். வரவேண்டிய நிலுவைத் தொகை மேலும் தள்ளிப்போகும். உயரதிகாரிகளின் விசாரணைக்கு ஆளாக வேண்டியது வரும். மற்றவர்களைப் பற்றி குறை சொல்ல வேண்டாம். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் சுமாராக இருக்கும் .விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். இலக்கை எட்ட முடியாமல் சிரமப்படுவார்கள். வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் -
தொழிலில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. இருப்பது இருப்பது போலவே செய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. அகலக்கால் வைக்க வேண்டாம். யாரையும் நம்பி பணம் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். ஒரு சிலருக்கு சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகும். உற்பத்தியான பொருட்கள் தேக்கநிலை உருவாகும். கட்டுமானத் தொழில் சுமாராக இருக்கிறது. பங்குவர்த்தகம் பெரிய ஆதாயம் ஏதும் இல்லை.
பெண்களுக்கு -
பெரிய ஆசைகள் எதுவும் வளர்த்துக் கொள்ள வேண்டாம். உங்கள் செயல்கள் மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். இல்லையென்றால் சமூகத்தில் அவப்பெயர் உண்டாகும். சமூக வலைதளங்களை விட்டு விலகி நில்லுங்கள். சமூக வலைதள நண்பர்களுடன் பழகுவதை நிறுத்துங்கள்.
மாணவர்களுக்கு - கல்வியைத் தவிர மற்ற அனைத்திலும் ஆர்வம் ஏற்படும். கல்வி அவசியம் என்பதை உணருங்கள். உயர்கல்வி கற்பவர்கள் பாடத்தில் கவனம் வையுங்கள் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கலைஞர்களுக்கு -
காலம் இன்னும் இருக்கிறது. பொறுமை அவசியம். ஒருசிலர் பயிற்சி மையங்கள் ஆரம்பிப்பீர்கள். அதற்கான உதவிகள் கிடைக்கும். பணவரவு சரியான நேரத்தில் கிடைக்கும்.
பொதுப்பலன் -
நன்மைகள் குறைவாக இருக்கும். அதற்காக பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று அர்த்தமல்ல. பாதிப்புகள் வருவதை கவனமாக எதிர்கொண்டால் பிரச்சனைகள் ஏதும் இருக்காது. சொத்து விற்பனை வீடு விற்பனை போன்றவை நடக்கும். பூர்வீக சொத்துக்கள் பாகப்பிரிவினை உண்டாகும். கடன்கள் அதிகமாகிக்கொண்டே போகும். எனவே செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவை தவிர வேறு எதற்கும் கடன் வாங்க வேண்டாம்.


இந்த வாரம் -
திங்கள் - மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள் .நண்பர்களுக்காக பயணத்தை மேற்கொள்வீர்கள் உங்களுக்கான ஆதாயம் குறைவு .
செவ்வாய் - கடன்கள் தீர வழி வகை கிடைக்கும். புதிய கடன் கிடைக்கும் சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக நடக்கும்' .
புதன் -அமைதியாக இருப்பது உங்களுக்கு நல்லது. உங்கள் செயல்கள் மற்றவர்களுக்கு கோபத்தை தூண்டும். நீங்கள் எள்ளி நகையாட படுவீர்கள்.
வியாழன் -நண்பர்களால் உதவி கிடைக்கும். தனவரவு திருப்தி தரும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். செலவுக்கு ஏற்ற பணம் கிடைக்கும்.
வெள்ளி -வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். பணவரவு உண்டு. எதிர்பார்த்த கடன் இப்பொழுது கிடைக்கும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு .சொத்துக்களை விற்று அதன் மூலம் கடன்களை அடைக்கவும் இந்த நாள் அந்த வாய்ப்புகளை தரும்.
சனி - அலைச்சல்கள் அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகும். கவனக்குறைவு ஏற்படும் சிந்தனை அதிகரிக்கும்.
ஞாயிறு - எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் நன்மை தரும். நண்பர்களை சந்தித்து அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.
வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீஆறுமுகப் பெருமானை செவ்வரளி மலர் கொண்டு அர்ச்சனை செய்து ஆறு நெய் தீபங்களை ஏற்றி வழிபடுங்கள். முருகன் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து தருவார் அவமானங்களிலிருந்து காப்பாற்றுவார். பணத் தேவைகளை பூர்த்தி செய்வார்.

*********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x