Published : 13 Feb 2015 11:38 AM
Last Updated : 13 Feb 2015 11:38 AM

மாணவர் போராட்டம் எதிரொலி: சென்னை சட்டக்கல்லூரிக்கு 18-ம் தேதி வரை விடுமுறை நீடிப்பு

மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரிக்கு வரும் 18-ம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 4-ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 8-வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு சட்டக்கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகளின் மாணவர்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சட்டக் கல்லூரிக்கு வரும் 18-ம் தேதிவரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டக்கல்லூரி நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறை, வரும் 18-ம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவர் களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x