Published : 17 Jan 2015 01:52 PM
Last Updated : 17 Jan 2015 01:52 PM

ஐஎஃப்எஸ் நேர்முகத் தேர்வு பிப்.2-ல் ஆரம்பம்

இந்திய வனப் பணி (ஐஎஃப்எஸ்) மெயின் தேர்வு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவு டிசம்பர் 19-ம் தேதி வெளியானது. அடுத்த கட்ட தேர்வான நேர்முகத் தேர்வுக்கு 234 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நேர்முகத்தேர்வு பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி முடிவடைகிறது.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வுக்கான அழைப்புக்கடிதம், கடிதம் வாயிலா கவும் இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பப்பட்டு வருவதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x