Published : 16 Nov 2014 10:07 AM
Last Updated : 16 Nov 2014 10:07 AM
முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயருக்கு இந்த ஆண்டுக்கான கே.ஆர். நாராயணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பெயரில் செயல்படும் அறக்கட்டளை சார்பில் தேசத்துக்கு சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது, நீதித்துறையில் சிறப்பாக செயல்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐய ருக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை கே.ஆர். நாராயணன் அறக்கட்டளையின் தலைவர் உழவூர் விஜயன், செய லாளர் எபி ஜே.ஜோஸ் ஆகியோர் வெளியிட்டனர். விருது தேர்வுக் குழு தலைவராக நீதிபதி கே.நாராயண குரூப் செயல்பட்டார்.
வரும் டிசம்பர் மாதம் நடை பெறவுள்ள கே.ஆர்.நாராயணன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது, வி.ஆர்.கிருஷ்ண ஐயருக்கு விருது வழங்கப்படும்.
இதற்கு முந்தைய ஆண்டு களில் இந்த விருதை கேரள சட்டசபை முன்னாள் சபாநாயகர் கே.ராதாகிருஷ்ணன், இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT