Published : 21 Apr 2015 01:03 PM
Last Updated : 21 Apr 2015 01:03 PM

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 9 பேர் பலி

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அரசுப் பேருந்து தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். அமேதி மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளது.

இது குறித்து மாவட்ட எஸ்.பி. ஹீரா லால் கூறும்போது, "சுல்தான்பூரை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. அமேதி மாவட்டம் ராம்காவோன் கிராமத்துக்கு அருகே வந்தபோது பேருந்தின் இன்ஜினில் மின் கசிவு காரணமாக தீப்பற்றியது.

அப்போது பேருந்தில் 42 பயணிகள் இருந்துள்ளனர். பலர் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு உயிர் பிழைத்துள்ளனர். 9 பேர் உடல் கருகி பலியாகினர்.

காயமடைந்தவர்கள் சுல்தான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் சடலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x