Published : 04 Jan 2015 10:33 AM
Last Updated : 04 Jan 2015 10:33 AM

மது அருந்தி புத்தாண்டு கொண்டாட்டம்: தெலங்கானா மாநிலத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் சஸ்பெண்ட்

தெலங்கானா மாநிலம், ஹைத ராபாத் நகரில் தீயணைப்பு வீரர்கள் 4 பேர், பணியின்போது மது அருந்தி, புத்தாண்டு கொண் டாடியதாக சஸ்பெண்ட் செய்ய ப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் நகரின் மொலாலி தீயணைப்பு நிலையத்தில் பணி யாற்றும் 4 வீரர்கள் கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு, மது அருந்தி, பிரியாணி சாப்பிட்டு, சினிமா பாடல்களுக்கு நடனமாடி புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். இதை சக வீரர் ஒருவர் தனது செல்போன் கேமராவில் வீடியோ எடுத்தார். இது நேற்று அந்தத் துறையில் பணி யாற்றும் நண்பர்களுக்கு பரவி, இறுதியில் தெலுங்கு ஊடகங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹைதராபாத் தீயணைப்பு துறை அதிகாரி கள், இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட 4 தீயணைப்பு வீரர்களும் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் மாவட்ட தீயணைப்பு படை அதிகாரி பாபய்யா நேற்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x