Published : 27 Nov 2014 12:24 PM
Last Updated : 27 Nov 2014 12:24 PM

பல்கலை. கிரிக்கெட்: எஸ்.ஆர்.எம். சாம்பியன்

தென் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் திருச்சி ஜெ.ஜெ. கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த 10 தினங்களாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியாட்டம் மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றன.

இறுதிப் போட்டியில் சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக அணி 42.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 43.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

3-வது இடத்துக்கான போட்டி யில் முதலில் விளையாடிய சென்னை பல்கலைக்கழகம் 30 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளை யாடிய மங்களூர் பல்கலைக்கழக அணி 27 ஓவர்களில்116 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கனரா வங்கி அம்மாபேட்டை கிளை மேலாளர் ரங்கராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x