Published : 28 Mar 2015 11:15 AM
Last Updated : 28 Mar 2015 11:15 AM

கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட6 பேர் கைது

அமைந்தகரை பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அமைந்தகரை வணிக வளாகத்தில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் இரவில் இளைஞர் ஒருவர் உணவு சாப்பிட்டுவிட்டு ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார். அவர் கொடுத்தது கள்ள நோட்டு என்று தெரிந்ததால், ஓட்டல் நிர்வாகத்தினர் போலீஸா ருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அமைந்தகரை போலீ

ஸார் விரைந்து வந்து இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவரது பெயர் அருண்குமார் என்பது தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்படி ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் (27), புனேவை சேர்ந்த கிஷோர் (20), சென்னை காவாங்கரையை சேர்ந்த பாபு (40), முகப்பேரை சேர்ந்த போலோராம் (28), வில்லி வாக்கத்தை சேர்ந்த ஸ்டான்லி பாபு (40) மற்றும் அருண்குமாரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். வெளி மாநிலங்களில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டு புழக்கத்தில் விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x