Published : 24 Feb 2015 09:08 AM
Last Updated : 24 Feb 2015 09:08 AM

ஊசி போட்டு நர்ஸ் தற்கொலை: வீடியோவில் பதிவான மரண காட்சிகள்

மடிப்பாக்கத்தில் ஒரு மருத்துவ மனையில் ஊசி போட்டு நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஊசி போடு வதும், கீழே விழுவதும் அங் கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் ஒரு தனியார் மருத்துவ மனை உள்ளது. நாகர்கோவில் வெட்டுன்னி மடத்தை சேர்ந்த தனலட்சுமி (22) என்பவர் இங்கு நர்ஸாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் தனலட்சுமி இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் நள்ளிரவு 1.30 மணியளவில் நர்ஸ் சீருடையிலேயே மருத்துவ மனைக்குள் இறந்து கிடந்தார். மருத்துவமனை ஊழியர்கள் இதை பார்த்து டாக்டருக்கு தகவல் கொடுக்க, அவர் மடிப்பாக்கம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து தனலட்சுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மருத் துவமனையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் தனலட்சுமி தனக்குத் தானே ஊசியை போட்டுக் கொண்டு சாய்ந்து விழும் காட்சிகள் பதிவாகி யிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தனலட்சுமி போட்டுக் கொண்ட ஊசி மருந்து இருதய அறுவை சிகிச்சையின்போது இருதய கட்டுப்பாட்டுக்காக போடப்படும் மருந்து என்பது தெரிந்தது. தனலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரிய வில்லை. இவரது தந்தை முருகன், கட்டிட தொழிலாளி. தாய் ராணி. மகள் இறந்த தகவலை அறிந்த தும் பெற்றோரும் உறவினர்களும் நேற்று காலையில் சென்னை வந் தனர். தாயார் ராணி கூறுகையில், "கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தனலட்சுமி வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் என்னோடு செல்போனில் பேசினாள். அப்போது நன்றாக இருப்பதாக கூறினாள். நள்ளிரவு 2 மணியளவில் டாக்டர்கள் போனில் தொடர்பு கொண்டு என் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x