Published : 30 Jun 2014 07:49 PM
Last Updated : 30 Jun 2014 07:49 PM
2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசீலாந்து அணிகளுக்கு இடையே முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டி ஹோபார்ட் அல்லது அடிலெய்டில் நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆட்டம் மதியம் 2 மணிக்குத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிங்க் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களின் நேரடி வருகை நாளுக்கு நாள் குறைந்து வருவதையடுத்து பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐசிசி நீண்ட நாட்களாகப் பரிசீலனை செய்து வந்தது.
இதற்கு எந்தப் பந்தைப் பயன்படுத்துவது என்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டு கடைசியில் பிங்க் பந்து என்ற முடிவெடுக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு தொடரிலும் கூட இனி ஒரு பகலிரவு டெஸ்ட் பரிசோதனை முயற்சியாக நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் பனிப்பொழிவு என்ற ஒரு பெரும் தொல்லையை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது.
ஆகவே, இந்தியாவில் எந்த சீசனில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும் என்பது இனிமேல்தான் முடிவாகும் என்று தெரிகிறது.
ஜெஃப் பாய்காட் உள்ளிட்டோர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT