Published : 06 Mar 2015 09:08 PM
Last Updated : 06 Mar 2015 09:08 PM

முதுநிலை மருத்துவ மாணவர்கள் சென்னையில் போராட்டம்

அரசு மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக்கோரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை)தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் முதுநிலை மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

மொத்தம் 507 காலிப்பணியிடங்களுக்கு தற்போது கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரத்துக்கு மேல் முதுநிலை மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x