Published : 20 Feb 2015 11:25 AM
Last Updated : 20 Feb 2015 11:25 AM
சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்ப தால் நிறுவனங்களும் சமூக வலைதளங்களுக்கு செலவிடும் தொகையை அதிகரித்துக் கொண்டிருக்கிறன என்று எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட 90 சதவீத நிறுவனங்கள் மார்க்கெட்டிங்குக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் தொகையில் 15 சதவீத தொகையை சமூக வலைதளங்களில் செலவிட திட்டமிட்டிருக்கின்றன.
2013-ம் ஆண்டு ஆய்வில் கலந்துகொண்ட நிறுவனங்களில் 78 சதவீத நிறுவனங்கள் மட்டுமே சமூக வலைதளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
இந்த ஆய்வு 2014-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை நடத்தப்பட்டது என்று எர்னஸ்ட் அண்ட் யங் தெரிவித் துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT