Published : 03 Mar 2015 09:28 AM
Last Updated : 03 Mar 2015 09:28 AM
ஸ்ரீபெரும்புதூர் அருகே விவசாய நிலங்களின் நடுவே இயங்கி வரும் கல்குவாரியை மூடக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர். பாறைகளை உடைக்க பயன்படும் வெடிமருந்து களால் ஏற்படும் அதிர்ச்சியில் அப் பகுதி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் கூறியதா வது: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட பூந்தண்டலம் கிராமப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசா யத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த விளை நிலங்களில் நடுவே தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பாறைகளை உடைப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைத்து அதில் வெடிமருந்துகளை செலுத்தி, பாறைகளை உடைக்கின்றனர்.
இதனால், விளை நிலங்களில் இயற்கைக்கு மாறான மாற்றங் கள் ஏற்படுகின்றன. உடைக்கப் படும் பாறைகளில் இருந்து வெளி யேறும் படிமங்கள், விளை நிலங் களில் படிவதால் பயிர்கள் பல் வேறு வகையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. பாறைகளை உடைக்கும்போது ஏற்படும் சத்தத் தின் வெடி அதிர்ச்சியினால், அப்பகுதியில் வசிக்கும் பெண் கள் கருச்சிதைவுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், கடந்த மாதம் குவாரியை முற்றுகையிட்டு மூடுமாறு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அப்போது, ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறையினர் கல் குவாரியை மூடுவதாக உறுதி அளித்தனர். ஆனால், குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால், கல்குவாரியை மூடக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் நேற்று மனு அளித்துள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது: பூந்தண்டலம் கிராமத்தில் செயல்படுவதாக கூறப்படும் கல்குவாரி குறித்து, கோட்டாட்சியர் மூலம் விசாரித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT