Published : 06 Mar 2015 09:56 AM
Last Updated : 06 Mar 2015 09:56 AM

ஒரு ரூபாய்க்காக தகராறு: நடத்துநர் - பயணி மோதல்

பெசன்ட் நகரில் ஒரு ரூபாய் சில்லறை தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் நடத்துநரும், பயணியும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

சென்னை திருவான் மியூரில் இருந்து திரு வொற்றியூர் நோக்கி மாநகர பேருந்து (தடம் எண் 6டி) நேற்று காலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தின் நடத்துநராக யுவராஜ் இருந் தார். பெசன்ட் நகர் நிறுத்தத் தில் வைத்து ஆற்காட்டு குப்பத்தை சேர்ந்த கணபதி என்பவர் பேருந்தில் ஏறி னார். டிக்கெட் எடுக்க 11 ரூபாயை சில்லறையாக அவர் நடத்துநரிடம் கொடுத்திருக் கிறார். அதை எண்ணிப்பார்த்த நடத்துநர் யுவராஜ் ரூ.10 மட்டுமே இருப்பதாகவும், இன்னும் 1 ரூபாய் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். நடத்துநர் யுவராஜ் தாக்கியதில் கணபதி யின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x