Published : 19 Feb 2015 10:15 AM
Last Updated : 19 Feb 2015 10:15 AM
பாகிஸ்தான் நாட்டில் போலியோ தடுப்பூசி செலுத்தும் குழுவைச் சேர்ந்த 4 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் அந்த நான்கு பேர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர். அந்த நான்கு பேரின் உடல்கள் நேற்று பலுசிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன.
இதுவரை எந்தத் தீவிரவாத இயக்கமும் இதற்குப் பொறுப் பேற்காத நிலையில், போலியோ தடுப்பூசி செலுத்துவதை எதிர்க்கும் தலிபான் தீவிரவாதிகள் தான் கொன்றிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 16-ம் தேதி காணாமல் போன இவர்களைத் தேடிச் சென்ற பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தினர்.
உலகில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் தான் போலியோ மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த ஆண்டில், பாகிஸ்தானில் மட்டும் 305 குழந்தைகள் போலியோ பாதிப் புக்கு உள்ளானது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT