Published : 10 Feb 2015 01:31 PM
Last Updated : 10 Feb 2015 01:31 PM
டெல்லி தேர்தல் முடிவு நிலவரத்தை குறிப்பிட்டு ஆம் ஆத்மி கட்சியியிடம் தமிழக காங்கிரஸ் கட்சி பாடம் கற்க வேண்டியுள்ளது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, " ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மக்கள் தங்களுக்கான தலைவரை தங்களது அருகாமையிலிருந்தே தேர்வு செய்கின்றனர். இதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டியது அவசியம். நமது கட்சியின் மாநில தலைமைக்கு நம்பகமான தலைவரும் கொள்கை ரீதியில் மாறுதலும் தேவை" என்றார்.
இதனை அவர் தமிழக காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 54.1% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 32.5% வாக்குகளும், காங்கிரஸ் கட்சி 9.4% வாக்குகளும் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட 69 வேட்பாளர்களும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அஜய் மாக்கன் நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT