Published : 25 Feb 2015 10:30 AM
Last Updated : 25 Feb 2015 10:30 AM

லாரி மோதி சிபிசிஐடி எஸ்.ஐ. பலி

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிபிசிஐடி உதவி ஆய்வாளர் லாரி மோதியதில் பலியானார்.

சென்னை அம்பத்தூர், கள்ளிக் குப்பம், கங்கா நகரை சேர்ந்தவர் தினகரன்(53). சென்னை சிபிசிஐடி போலீஸ் பிரிவில் உதவி ஆய்வாள ராக உள்ளார். எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வருவதற்காக நேற்று காலையில் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட் டார். வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கம் அருகே புதிய ஆவடி சாலையில் வந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, மோட்டார் சைக்கிளின் இடது பக்கத்தில் லேசாக இடித்தது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தினகரன் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் சம்பவ இடத்திலேயே தினகரன் பரிதாபமாக இறந்தார்.

திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தினகரன் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை ஓட்டி வந்த பெருங்களத்தூரை சேர்ந்த ஐய்யப்பனை கைது செய்தனர்.

விபத்தில் இறந்த தினகரனுக்கு சந்திர லீலா என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x