Published : 04 Jan 2015 12:13 PM
Last Updated : 04 Jan 2015 12:13 PM
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட்கள் மறைத்து வைத்திருந்த குண்டுகள் வெடித்ததில் நக்ஸல் எதிர்ப்பு சிறப்புப்படை வீரர்கள் இருவர் நேற்று காயம் அடைந்தனர்.
கோப்ரா என்று அழைக்கப்படும் சிறப்புப் படை வீரர்கள் சிந்தாகுபா காவல் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் நக்ஸட்லைட்களை தேடும் பணியில் ஈடு பட்டிருந்தனர். இந்நிலையில் நக்ஸல்கள் வைத்திருந்த குண்டுகள் மீது வீரர்கள் தெரியாமல் கால்வைத்தபோது அது வெடித்துள்ளது.
இதில் திலக், சி.ஜே.ரெட்டி என்ற 2 வீரர்கள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டு, இருவரும் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
சுக்மா மாவட்டத்தில் உள்ள இதே பகுதியில்தான் கடந்த மாதம் நக்ஸலைட்கள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தி 14 சிஆர்பிஎப் படையினரை கொன்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT