Published : 18 Feb 2015 11:10 AM
Last Updated : 18 Feb 2015 11:10 AM
அமெரிக்காவின் சங்கிலித் தொடர் நிறுவனமான வால்மார்ட்டின் இந்தியப் பிரிவு ஆந்திர மாநிலத்தில் 15 விற்பனையகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
டாவோஸில் சமீபத்தில் நடைபெற்ற உலக பொருளாதார பேரவை கூட்டத்தில் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவை வால்மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் செஸ்ரைட் சந்தித்தார். அப்போது ஆந்திர மாநிலத்தில் வால்மார்ட் விற்பனையகம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆந்திர மாநில முதல்வரைச் சந்தித்த வால்மார்ட் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி கிருஷ் ஐயர், தங்கள் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 15 விற்பனையகங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் விஜய வாடா, குண்டூர், ராஜமுந்திரி யில் ஏற்கெனவே 3 விற்பனையகங்களை வால் மார்ட் நிறுவியுள்ளது. இவை அனைத்தும் மொத்த விற்பனை நிலையங்களாகும்.
இந்தியாவில் சில்லரை வர்த்த கத்தில் வெளிநாட்டு நிறுவனங் கள் ஈடுபடுவதற்கு இன்னமும் லைசென்ஸ் வழங்கப்படவில்லை. இதனால் மொத்த விற்பனையகங் களை வால்மார்ட் நிறுவி செயல் படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
குளிர்பதன கிடங்குகளை ஆந்திரத்தின் கிராமப்பகுதிகளில் அமைத்து விவசாயிகளுக்கு உதவுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்படி வால் மார்ட் நிறுவனத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT