Published : 17 Feb 2015 09:51 AM
Last Updated : 17 Feb 2015 09:51 AM

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கரன்சி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்படத் தயாராக இருந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த நைனாமுகமது ராவுத்தர் (40) என்பவரின் சூட்கேசை திறந்து பார்த்தபோது, இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் கரன்சிகள் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கும் என தெரியவந்துள்ளது.

ஆனால் அவரிடம், பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x