Last Updated : 19 Sep, 2014 09:54 AM

 

Published : 19 Sep 2014 09:54 AM
Last Updated : 19 Sep 2014 09:54 AM

டோக்கியோ ஓபன் அரையிறுதியில் சானியா ஜோடி

டோக்கியோ ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் சானியா மிர்ஸா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சானியா-காரா ஜோடி தங்களின் காலிறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்-பெலின்டா பென்சிச் ஜோடியைத் தோற்கடித்தது.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா ஜோடி, எதிர் ஜோடியின் சர்வீஸை 7 முறை முறியடித்த அதேவேளையில் தங்களின் சர்வீஸை 4 முறை இழந்தது. சானியா ஜோடி அடுத்ததாக செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச்-ஸ்பெயினின் அரன்ட்ஸ்கா பாரா சன்டோன்ஜா ஜோடியை சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x