Published : 11 Apr 2014 09:40 AM
Last Updated : 11 Apr 2014 09:40 AM

ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு பிறப்பிப்பு

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு ஓய்வூதியதாரர் கள், குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கு 1.1.2014 முதல் அகவிலைப் படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு ஓய்வூதி யதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கு 1.1.2014 முதல் கூடுதல் தவணையாக 10 சதவீதம் அகவிலைப்படி வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, 1.1.2014 முதல் அகவிலைப்படி 100 சதவீதமாக திருத்தியமைக்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1.1.2014 முதல் ரொக்கமாக வழங்கப்படும்.

இந்த உத்தரவு, அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் ஓய்வூதியதாரர்கள், பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு நிறுவனம் போன்றவற்றில் ஒட்டுமொத்த தொகை பெற்ற ஓய்வூதியத்தை தொகுத்து பெறும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை திரும்பப் பெறும் தகுதியுள்ள, திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் திரும்பப் பெறும் தொகை பெற தகுதியுள்ள மாநில அரசு பணியாளர்கள் ஆகியோருக்குப் பொருந்தும்.

கருணைப்படி ஓய்வூதியதாரர்கள் தற்போதைய மற்றும் எதிர்கால குடும்ப ஓய்வூதியதாரர்கள், பகிர்வு முறையில் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களைப் பொறுத்த வரையில் அகவிலைப்படி விகிதாச்சாரத்திற்கிணங்க பிரிக் கப்படலாம்.

1.11.1956-ம் நாளன்று, தமிழ்நாடு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பகுதிகளில் அதேநாளில் ஓய்வூதியம் பெறுகின்ற முந்தைய திருவாங்கூர்-கொச்சி மாநில ஓய்வூதியதாரர்கள், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின்கீழ் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் கருணைப்படி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் மேற்கண்ட உத்தரவு பொருந்தும்.

கருணைத்தொகை பெறும் மாநில அரசு மற்றும் முன்னாள் மாவட்ட வாரியத்தின் வருங்கால வைப்புநிதிக்கு தொகை செலுத்திய, ஓய்வூதியம் இல்லாத பணியாளர் அமைப்பைச் சேர்ந்த பயனாளிகளான இறந்த பணி யாளர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளுக்கும் அகவிலைப்படி அளிப்பது குறித்த ஆணைகள் தனியாக வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x