Published : 09 Feb 2015 10:32 AM
Last Updated : 09 Feb 2015 10:32 AM

வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்: சென்னையில் மட்டும் நாளை நடக்கிறது

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் வேலை, புதிய மருத்துவ திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி இந்திய வங்கிகள் சங்கத்துடன், வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவு ஏற்படவில்லை. 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் வேலை நிறுத்தமும், மார்ச் 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (9-ம் தேதி) தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் நாளை (10-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. இதேபோல், வரும் 13, 20 மற்றும் 24-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இத்தகவலை, வங்கிகள் சங்கத்தின் ஐக்கிய கூட்டமைப் பின் தமிழக பிரிவின் ஒருங் கிணைப்பாளர் எம்.வி.முரளி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x