Published : 09 Feb 2015 10:32 AM
Last Updated : 09 Feb 2015 10:32 AM
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் வேலை, புதிய மருத்துவ திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி இந்திய வங்கிகள் சங்கத்துடன், வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவு ஏற்படவில்லை. 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் வேலை நிறுத்தமும், மார்ச் 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (9-ம் தேதி) தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் நாளை (10-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. இதேபோல், வரும் 13, 20 மற்றும் 24-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இத்தகவலை, வங்கிகள் சங்கத்தின் ஐக்கிய கூட்டமைப் பின் தமிழக பிரிவின் ஒருங் கிணைப்பாளர் எம்.வி.முரளி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT