தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த ரித்விகா

செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி நடித்துவரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிக்கிறார் ரித்விகா.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த வருடம் (2019) ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன் ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தப் படத்தில், விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை எனக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கதையில், சர்வதேச அளவிலான ஒரு பிரச்சினையைப் பேசியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்நிலையில், ‘பிக் பாஸ் 2’ வெற்றியாளரான ரித்விகா, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த அறிவிப்பை, இயக்குநர் பா.இரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

SCROLL FOR NEXT